Wednesday 13 March 2013

*ம்மே*


கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கும்
ஆட்டு தலையின் நிலைக்குத்திய பார்வை
என்னை வெறிக்கிறது, 
கறிவெட்டும் சப்தம் , கடந்த பின்னும்
காதில் ஒலிக்கிறது!
பச்சிறைச்சின் நெடியை கடக்கும்
ஒவ்வொரு முறையும் 
கசாப்புக்கடை மரத்துண்டாய்
வெட்டுப்படுகிறது மனம்,
எனக்காகவும் சேர்த்தே
தன் பெருங்குரலெடுத்து அலறுகிறது
ஏதோ ஒரு ஆடு!


No comments:

Post a Comment