Wednesday 13 March 2013

*எச் எம் டீ கோஹினூர்*

அப்பா பெரும் கோபக்காரர்,
"எப்பிடீம்மா,
இந்த மீசக்காரர
கெட்டிக்கிட்டு வாழ்ந்தே?" 

"இல்லேனா, உன்னமாரி,
ஒரு புள்ளைய  பெத்து,
வளத்தீருக்க முடியுமா ராசா"

சிரித்த படியே ,
அப்பாவின் கதை சொல்ல தொடங்குவாள் ,அம்மா!
அவர் சினிமா கூட்டிப்போன கதை,
பழனியில் எனக்கு மொட்டைப்போட்டவனிடம்
சண்டையிட்ட கதை,
தன் அக்கா , தங்கையின் கல்யாணம் செய்துவைக்க
வெளியூர் வேலைக்கு சென்ற கதை,
ஓரிரு நாள் சாராயம் காய்ச்சிய கதை,
ஒழுகும்  குடிசை மாற்றி
ஓட்டு வீடு கட்டிய கதை,
இன்னும் இன்னும் எத்தைனையோ கதைகள்,
கதைகளின் முடிவில் ,
கன்னம் கிள்ளி
முத்தம் தருகிறாள் எனக்கு!

திருமண புகைபடத்தில்,
பம்மி நிற்க்கும் அம்மாவின் அருகே,
கம்பீரமாய் என்னை பார்த்து சிரிக்கிறார்
மீசைக்காரர்.

மீசையை  முறுக்கி விட்டு,
செல்லமாய் ,என் பின்னாந்தலை தட்டுவது போல,
லேசாய் ஒரு தட்டு கொடுக்க,
ஒடத்தொடங்குகிறது
அப்பாவின் எச் எம் டி வாட்ச்,
வீடு நிறைகிறது அவர் சிரிப்பு சப்தம்!

கணேஷ்மூர்த்தி சிவராமன்

No comments:

Post a Comment