ஊடல் கழிந்த இரவுகளில்
எனக்கான முத்தங்களையெல்லாம்
மூட்டை கட்டி வைத்திருக்கிறாள்,
நானொன்று கொடுக்கையிலோ
முரண்டு பிடிக்கிறாள்,
ஒன்று இரண்டு என, மூண்றோடு
திரும்பி படுத்த ஐந்து நிமிடங்களில் ,
அவிழ்ந்து விடுகிறது அவளது மூட்டை,
உடைந்து விடுகிறது எனது அணை,
கடலில் சேர்கிறது நதி!
No comments:
Post a Comment