Wednesday 13 March 2013

ஊடல் கழிந்த இரவுகளில்
எனக்கான முத்தங்களையெல்லாம்
மூட்டை கட்டி வைத்திருக்கிறாள், 
நானொன்று கொடுக்கையிலோ
முரண்டு பிடிக்கிறாள்,
ஒன்று இரண்டு  என, மூண்றோடு
திரும்பி படுத்த ஐந்து நிமிடங்களில் ,
அவிழ்ந்து விடுகிறது அவளது மூட்டை,
உடைந்து விடுகிறது எனது அணை,
கடலில் சேர்கிறது நதி!


No comments:

Post a Comment