Friday 4 January 2013

*ஆயிரம் நாவு*


தோழிகளின் சம்பாஷணை,
இவள் கண்கள் விரித்து ஆச்சர்யப்பட்டவாரே
பேசிக்கொண்டிருந்தாள் ,
இடையிடையே
முன்னால் விழும் முடியை ஒதுக்கியவாறு,
கண்விழிகள் படபடக்க,
அவளின் சாரியை (ஒரு பூவை) தொட்டு
ஏதோ சுட்டிக்காட்டியவாறு
ஒரு வேளை ,
புடவை பேச்சாக இருக்கலாம்,
அல்லது வேறு எதுவோ, 
நேரம் பார்த்தாள்
படபடத்தாள்
ஓயாமல் பேசினாள்
அவள் என்ன சொன்னாளோ,
இவள் சிரிப்பு சப்தம்
உச்சஸ்தயியில் வெளிப்பட்டது

அலுவலகத்தில் நடந்த
ஏதேனும் கிசுகிசுப்பை பகிர்ந்தார்களோ?
மிக நீண்ட நேர உரையாடல்
அவர்களுடையது!
உலகின் எல்ல விஷயங்களையும்

இன்றே பேசி தீர்ப்பதாய்
முடிவெடுத்தவர்கள் போல!
இவளின் அலைபேசி
சிறு அதிர்வுடன் ஒளிர்ந்தது ,
ஒரு முறை ஆச்சரியப்பட்டு மென் புன்னகை பூத்தாள்
பின் பேச்சே இல்லை ,
மற்றவளின் பேச்சிற்க்கு
புன்னகையும் தலையசைப்பும் மட்டுமே!
எது எப்படியோ
அவளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்து
அவளும் புன்னகை பொழியட்டும், 
அவனின் குறுஞ்செய்தி!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!


No comments:

Post a Comment