Wednesday 9 January 2013

எழுத்தோலை கவிதை போட்டிக்கான என் கவிதைகள்!

1,  *இசையும் இயலும் நாடகமும்!*

மேடைகளில் சிம்மம் ,
என் தமிழ்,
கவிதைகளில், சொட்டும் தேன்,
கதைகளிலோ ,நிலாக்காலம்!!!

ஆஹா, என் தமிழ் அழகு!
நம் தமிழ் , அழகோ,அழகு!   ***

"எங்கடா படிச்சே "கேட்டேன்.
"கார்ப்பரேசன் ஸ்கூல்ல" என்றான்!

என்னடா செய்ரேன்னு கேட்டான்,
"கார் வொர்க்ஷாப்"புன்னேன்!

நலம்,
கன்னம் சுருங்கி
கண்கள் குழிவிழுந்து,
பார்வை மங்கி
கை கால் நடுங்க,
கைத்தடி தேடித்தடவும் ,

மூன்று பிள்ளை பெற்று வளர்த்த
முதியோர் இல்ல தாய் போல,
அன்னை தமிழின்
இன்றைய நிலை,
மிக்க நலம்!
**************
2,

அப்பாவின் அப்பா பெயர்,
அப்பாரு.
அப்பவின் பெயர், அப்பா.
என் பெயர் "டாடி"!
படி மகனே,
குலம் செழிக்க.......
குடும்பம் செழிக்க .....
நன்றாய் படி!
******-********
3,

குப்பை கிளறும், ஒரு மென் கரம்.
கல் சுமக்கும் ,
இளந்தலை .

கீழே கத்தி வைத்து
கம்பி மேல் நடக்கிறது
நாட்டின் கால்கள்.  
விதை நெல்லை
விற்று தின் னும்
விவசாயிகள் நாம் ,
காலத்தின் முச்சந்தியில்
நாளை நிற்ப்போம் 
அம்மணாமாய்!
ஐயோ,வெட்கக்கேடு!


No comments:

Post a Comment