1, *இசையும் இயலும் நாடகமும்!*
மேடைகளில் சிம்மம் ,
என் தமிழ்,
கவிதைகளில், சொட்டும் தேன்,
கதைகளிலோ ,நிலாக்காலம்!!!
ஆஹா, என் தமிழ் அழகு!
நம் தமிழ் , அழகோ,அழகு! ***
"எங்கடா படிச்சே "கேட்டேன்.
"கார்ப்பரேசன் ஸ்கூல்ல" என்றான்!
என்னடா செய்ரேன்னு கேட்டான்,
"கார் வொர்க்ஷாப்"புன்னேன்!
நலம்,
கன்னம் சுருங்கி
கண்கள் குழிவிழுந்து,
பார்வை மங்கி
கை கால் நடுங்க,
கைத்தடி தேடித்தடவும் ,
மூன்று பிள்ளை பெற்று வளர்த்த
முதியோர் இல்ல தாய் போல,
அன்னை தமிழின்
இன்றைய நிலை,
மிக்க நலம்!
**************
2,
அப்பாவின் அப்பா பெயர்,
அப்பாரு.
அப்பவின் பெயர், அப்பா.
என் பெயர் "டாடி"!
படி மகனே,
குலம் செழிக்க.......
குடும்பம் செழிக்க .....
நன்றாய் படி!
******-********
3,
குப்பை கிளறும், ஒரு மென் கரம்.
கல் சுமக்கும் ,
இளந்தலை .
கீழே கத்தி வைத்து
கம்பி மேல் நடக்கிறது
நாட்டின் கால்கள்.
விதை நெல்லை
விற்று தின் னும்
விவசாயிகள் நாம் ,
காலத்தின் முச்சந்தியில்
நாளை நிற்ப்போம்
அம்மணாமாய்!
ஐயோ,வெட்கக்கேடு!
No comments:
Post a Comment