தன் தெத்துபல் பதிய
அம்மாவை கடிப்பாள்,
தன் மீது மோதிய கதவை
"அடி,அடி"
கால் தடுக்கிய வாசல் படி
தலையில்
"குட்டு,குட்டு"
கடித்து பறந்த கொசுவின் பின்னால் ஓடுவாள்
"பிச்சு பிச்சு"
அலுவலக கோப்புகளில்
மூழ்கி கிடக்கயில்
என்னயே சுற்றிவந்து கொசுவொன்று
ஆனந்த வர்ஷினியின்
பெயரை பாடி பறக்கும்.................
க்கோக்கோக்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்!
No comments:
Post a Comment