Wednesday 16 January 2013

தும்பியும் மழையும்!

என்னை முற்றிலும் பிரித்து பிரித்து,
உன் முன் வரிசைப்படுத்தி
நிரப்பி வைத்திருக்கிரேன்!
ரகசியங்கள் ஏதுமற்ற நிர்வாணத்தை.
ஏற்றுக்கொள்ளவோ,
உதாசீனப்படுத்தவோ,
உரிமைகளும் சுதந்திரமும்! .

ஏற்றுக்கொள்ளிதலில் மகிழ்ச்சி,
உதாசீனத்தை பற்றின
புகார்களில்லை.

நீ ரசித்தாலும்
முகர்ந்தாலும்
பறித்தாலும் ,
பகிர்ந்தாலும்
கவனியது கடந்தாலும்
பூக்கள் பூக்கும்!

நீ வராத பாதையில் வேர்விட்டு பூத்த
காட்டுச்செடி இது,
நீ கடந்து சென்ற பின்னும்
பூக்கும்; ஆனால்
மழையில்லா நிலம் வறளும்!


No comments:

Post a Comment