Tuesday 15 January 2013

பிடிவாதங்களின் சருகுகள்!

"ச்சட,ச்சட "என
பெருங்குரலெடுத்து,
காடு பற்றியெரிகிறது,

உள்ளிருக்கும் வார்த்தைகள்
உரசியுரசி ,

சருகில் விழுந்த
தீப்பொரி
படர்கிறது  ,
வன்மமான காட்டுதீயாக!

பற்றியெரிகிறது காடு

உயிர்க்காடு!
பச்சைமரம் தீப்பிடிக்க
சாபம் பலிக்க,
வார்த்தைகள்
நேசம்
கவிதை
காதல்
பிணக்கு
எல்லாமும் எரியட்டும் ,
"ச்சட,ச்சட"வென,
சிறகில் தீ பிடித்த பறவை,
பறந்ததோ,விழுந்ததோ?
தீ
அதுக்கு தெரியுமா? கூடும்,சிறகும்!
வார்த்தையும், மெளனமும்
சிலநேரம் "தீ"போல! 
நாம் மூட்டிய தீ
நம்மை எரிக்கட்டும்!


No comments:

Post a Comment