எப்படியேனும் வாங்கி கொள்வாள்
ஒரு கவிதையை!
கால் மேல் காலிட்டு ,
கண்கள் விரித்து,
தலை உயர்த்தி
ஒரு மஹாரணியாய் உத்தரவிடுவாள்!
செல்லம் கொஞ்சி பெற்றுக்கொள்வாள்,
சிலநேரம் அழுது
சில நேரம் முகம் சுருக்கி,
குற்றம் கண்டுபிடித்து
முத்தமிட்டு
கோபபட்டு,
வெட்க்கப்பட்டு
இன்னும் இன்னும்,
எப்படியேனும்!
பொம்மைகடை
குழந்தைகளின் வியப்பை சேகரிப்பது போல்,
ஏதேனும் ஒரு கவிதை படைத்து
உன்னை சேமிக்கிறேன்
உள்ளிளுள்ளே!
No comments:
Post a Comment