Thursday 6 December 2012

கவிதாஞ்சலி

குலை பாரத்தில் சரியும் வாழையாக ,
உனக்கான கவிதைகள்
சுமந்து சரிகிறேன் .
உயிர் போன செய்தியறிந்தால்
எனக்காய் ,
ஒரு கவிதையெழுது!
உன் காதல் கிடைக்காத ,எனக்கு,
ஒரு கவிதையேனும் கிடைக்கட்டும்!
இறந்த கர்ப்பிணி, நினைவாய் வைக்கும் ,
சுமைதாங்கி கல்லை போல,
எனக்காய் ஒரு கவிதை!


No comments:

Post a Comment