Monday 24 December 2012

எருமை

ஸ்பரிசங்களின் மீதான,
சுதந்திரம் பற்றிய ஊடலில்
கோபம் கொண்டிருந்தேன்,
ஆதங்கமும்
அவமானமும்
கோபமும்
அழுகையும் முட்ட
தீர்க்கமாய் பார்த்து,
"என்ன வேணாணுணாலும் செஞ்சுக்கோ " என்று
கொஞ்சம் நெருங்கி வந்தமர்ந்தாள்.
திருட்டு "தம்"முக்கு ஆசைபடும் "கொஞ்சம் வளர்ந்த  பெரியபையன்"
அம்மாவிடம் அகப்பட்டு  தவிப்பதுபோல்
தலை கவிழ்ந்து நிற்கிரேன்………………
இறுக்கியணைத்து
நெற்றி முத்தமிட்டு
"டேய், எரும, நான் உன்னோடது" என்கயில் 
எதற்க்காக வந்ததோ?
எனக்கந்த கண்ணீர்!


No comments:

Post a Comment