கோபுரத்திலிருந்து
ஒரு சேர பறக்கும்
ஆயிரம் புறாக்களின்
சிறகடிப்பு சப்தமாய்,
உன் மெனங்களிலிருந்து
பேரிரைச்சல் கிளம்புகிரது!
உலகையும் ,வாழ்வையும்
சபித்துவிட்டு
அமைதியாகிராய்,
பிரகாரத்திற்க்கு வெளியே கிடக்கும்
ஊனமுற்ற தூணை ப்போல!,
உதாசீனபடுத்தப்பட்ட குழந்தையின்
பெருங்குரல் அழுகையை
ஆறுதல் படுத்த நெருங்கயில்,
ஏதோ ஒரு கோபத்தை படரவிட்டு,
தேம்பி தேம்பி அழுது
"டூ" விட்டு
"நீயெனக்கு சேர்த்தியில்லையென்று"
தனிமைக்குள் புகுந்துகொள்கிராய்!
குழந்தையை வாரி அணைக்கலாம் ,
உன்னை என்ன செய்ய???
Saturday, 29 December 2012
பிணக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment