Wednesday 12 December 2012

மாலகோவில்

பலூண்களின் வண்ணமும் வடிவமும்
கவர்ந்திழுக்க,
ராட்டின சவாரி வேடிக்கை பார்த்து,
ஜவ்வுமிட்டாய் வாசனையில்
எச்சில் ஊறி,
இரண்டு ரூபாய் குச்சி ஐஸ் மட்டுமாகி,
தேம்பலில் கரைந்தபடி
சில,மாலகோவில் !

வண்ண வண்ண கனவுகளை
விரல்களில் கட்டி,
காதல் ராட்டினத்தில்
ஏற்றி,இறக்கி,
ஜவ்வு மிட்டாய் நினைவுகளை
கை நிறைத்து,
புன்னகை பரிசளித்து கடக்கிறாள் என்னவள்; ஒரு மகிழ்ச்சியான மாலகோவில்!

கடைசிபெட்டிக்கு "டாட்டா"காட்டும்
சிறுவனின் சடுதியில்,
முடிந்தளவு முத்தம் கொட்டி
விடைகொடுக்கிறேன்,
இயல்பை நொந்தபடி!

இன்னொரு ரயில் வரும்,
இன்னொரு திருவிழாவும்!

விழாவற்ற நாட்களில் ,
தனிமை காயும்,
மனமென்னும் மாலகோவில்; மாதேஸ்வரன் துணை!


No comments:

Post a Comment