Sunday 25 November 2012

எதிர்கடக்கும் பேருந்துகளின் ,
இரு குழந்தைகள் போல,
பக்கவாட்டில் தலைசாய்த்து,
புன்னகை தெறிக்க,
கையசைத்து, கடக்கும் நிலை,
உனக்கு வாய்த்தது,எப்ப்படியோ!
நெடுமூச்சொன்றை
உதிர்த்துவிட்டு,
கண்கள் மூடி மெளனமாகிறேன்!
விமானம் பார்த்து,
பின்னால் ஓடும்
சிறுவன் போல,
உன் நினைவுகளை
துரத்தியபடி!


No comments:

Post a Comment