Sunday 25 November 2012

தீராப்பெருங்கதை


என் விடுமுறை நாட்களில் மட்டும்,
துண்டை மறந்து,
குளிக்க செல்லும்
மறதிக்காரி!

***

"கொஞ்சம் இங்க வாங்க"
உள்ளாடைக்கு கொக்கி போட
உத்தரவிட்ட மகாராணி ,
முதுகில் கை பட்டால்
முறைப்பாள்!

*** 

ஒப்பனை முடித்து கிளம்பையில் ,
பின்னாலிருந்து அணைத்தால்,
என் பெயர் சொல்லி கத்துவாள்,
பேரழகி பிசாசு!

***

என் அத்தை மகள்களை பற்றி
இன்னும் ,எத்தனை கதை

வைத்திருக்கிறாளோ?
புரளியை கிளப்பும்
பொல்லாதவள்!

***

என்னோடு பேச வரும்
பெண்களையெல்லாம்
தன் புடவை பற்றி பேச வைக்கும்
கெட்டிக்காரி!

***

சிரித்தபடி எச்சரிப்பாள்,
"அங்க ஆம்பிளைங்க பக்கம் இருங்க,
வந்துர்ரேன்"!

***

"டேய்"என்பதும் "புருசங்காரா" என்பதும் ,
குறிப்பறிவித்தல்!
"கருமீ" சொல்கயில் மட்டும்
கள்ளசிரிப்பாய்
கடக்கும்,
திருடி!

***

வரும் வழியெங்கும் ,
அமைதியின் வடிவாய் இருப்பாள்,
இன்னும், இரண்டு நாட்கள்,
சிரித்து,
அழுது,
ஆர்ப்பாட்டம் செய்து
பேசி,பேசி
கொல்லபோகும்
பொண்டாட்டிக்காரி!

***

மனைவியுடன் சேர்ந்து போகும்
கல்யாண கதைகள்,
மகாபாரத கதைகள் விட,
நீண்டு போகும்!


No comments:

Post a Comment