Wednesday 28 November 2012

*மழையும் , வெயிலும்*

நின்று எரிந்த சடலங்களாய்
கருகி செத்த பூச்செடிகள்.
உடைந்த செங்கல்லும்,
ஒற்றை செருப்பும் ,
ஜல்லி கற்களும்
உள்ளே சிதறிய
தண்ணீர்த்தொட்டி.
முற்றம் முழுதும்  கலைந்து கிடக்கும்
மழையில் ஓடிவந்த
காலடித்தடங்கள்.
உடைத்து நொறுங்கிய
பீர் பாட்டில்.
உபயோகித்து வீசிய
ஆணுறை பாக்கெட்.
தூரத்து
பாழ்மரப்பொந்தில்
குஞ்சு தத்தை
"கீச்சொலி"யெழுப்ப குழந்தையின் அழுகையும்,
அம்மாவின் கொஞ்சலும் ,
அப்பாவின் அதட்டலும்
காற்றில் தேடி ,
தன்னகத்து தனிமையில்
மரணித்துக்கொண்டிருக்கும்
ஊருக்கு வெளியே ,
ஓடுகள் உடைந்த
ஒற்றை வீடு!


No comments:

Post a Comment