Wednesday 28 November 2012

மாலகோவில்

மஞ்செ அரைக்கும் புள்ளே,
மனசுக்குள்ளே நெறஞ்ச புள்ளே ,
புதுசா சமஞ்ச புள்ளே,
பூக்கோலம் போட்ட புள்ளே,
மைக்கண்ணால் சேதி சொல்லு
மாமன் உன்ன தூக்கிபோறேன்!
மாலகோவில் நோம்பிக்கு ,நான்
மை,வளையல்
வாங்கித்தாறேன்

****

போர்வைக்குள் புகுந்து விட்ட
பூரான போல,
நெஞ்சுக்குள் நெளியுதடா
உன் நெனப்பு!
வார்த்தையெல்லாம்
கொடுக்குத்தேளு,
பாக்கும் பார்வை
செங்குளவி,
ஆச, வெஷம் தலைக்கு ஏற,
தள்ளாடி தவிக்கிரேன் நானு ,
தாங்கி புடிக்க யாருமில்ல!
நீ ,கண்டாஙி சேல தர
காலமெல்லாம் காத்திருப்பேன்!
பாதையெல்லம் பாத்திருபேன்!


No comments:

Post a Comment