பாசி படர்ந்த
பழுப்பு சுவரில்
கரித்துண்டு கிறுக்கலில்,
நிர்வாண பெண்ணின்
கோட்டோவியம்!
ஏதோ ஒரு பிக்காசோ!
பெண்குறி பற்றிய,
பின் நவீனத்துவ
கவிதையொன்று
காணக்கிடைக்கும்,
ஏதோ ஒரு பாப்லோ நெருதா!
"தண்ணீ தொட்டீ தேடீ வந்த" கேட்கும்,
யேசுதாஸ்,tms ன்
ஏதோ மி(எ)ச்சங்கள்!
மொக்கு சந்தில்
கஸ்டமருக்கு
காத்திருக்கும் சரசக்கா!
ரம்பை,ஊர்வசி,மேனகை வரிசை போலும்!
tasmac ஒரு போதிமரம்,
tasmac ஒரு கலைக்கூடம்!
ஓவியன்,
கவிஞன்,
பாடகன்,
பேச்சாளன்………………!
"கலை!……………
அள்ளியள்ளி பருக வேண்டிய ,
அமிர்தமடா அது!"
கன்னம் வழிந்த
வாந்தியை
நாயொன்று மோப்பமிட,
மூத்திர சந்தில்
மூச்சற்று கிடக்கும்
கிழவனுக்கு ,
வாய்த்ததெந்த
ஞானநிலை?
Wednesday, 7 November 2012
மிதக்கும் நகரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment