கரிகாலனின்
வாள் வீச்சில் ,
ஆயிரம் யானைகள்..........
மிரண்டு போய்
சிதறியோடும்,
புழுதி பறக்க………
நிலம் அதிர………
பிளிறி வீழும்!
****
வேட்டையில் தப்பிய
திமிங்கலம்,
ஈட்டியின் ரணத்தில்
இறந்து ஒதுங்கும்!
****
அட்டைபூச்சி நீந்திய
வெள்ளைக்கோட்டு
பாதையாய்
காலம் நகரும்!
****
புல்லின் நுணியில் ,
பனித்துளி பழம்
உதிர்ந்து விழ ,
இலை நிமிரும் !
****
நீ பார்க்க புன்னகைக்கும்,
நீ நட்ட
செம்பருத்தி!
****
நீ கொஞ்சாத,
தெருநாயொன்று
வாலசைத்து
மோப்பமிடும்!
****
உயிர்ப்பிக்கும் காதல்…………
முதலில் கொல்லும்!
No comments:
Post a Comment