Wednesday 14 November 2012

ஒரு காதலும் , ஒரு சில கவிதைகளும்

கரிகாலனின்
வாள் வீச்சில் ,
ஆயிரம் யானைகள்..........
மிரண்டு போய்
சிதறியோடும்,
புழுதி பறக்க………
நிலம் அதிர………
பிளிறி வீழும்!
****
வேட்டையில் தப்பிய
திமிங்கலம்,
ஈட்டியின் ரணத்தில்
இறந்து  ஒதுங்கும்! 
****
அட்டைபூச்சி நீந்திய
வெள்ளைக்கோட்டு
பாதையாய்
காலம் நகரும்!
****
புல்லின்  நுணியில் ,
பனித்துளி பழம்
உதிர்ந்து விழ ,
இலை நிமிரும்   ! 

****
நீ பார்க்க புன்னகைக்கும்,
நீ நட்ட
செம்பருத்தி!
****
  நீ கொஞ்சாத,
தெருநாயொன்று
வாலசைத்து
மோப்பமிடும்!

****

உயிர்ப்பிக்கும் காதல்…………
முதலில் கொல்லும்!

No comments:

Post a Comment