Monday 29 October 2012

*பெரும் சாட்சி*

மூலவருக்கு தெரியும்!
கரிகாலனின் முகமும் ,
மாணிக்கவாசகனின் குரலும்,
என் நெற்றியில்
திருநீறு கீறிய
அந்த பூ விரலும்,
இந்த மெளனத்தின் புலம்பலும்,
கனவுகளின் கண்ணீரும்,
கண்ணீரில் கலந்திருக்கும்
காதலும்!


No comments:

Post a Comment