கார்த்திகை மாத இரவில்
குளிர்ந்து ஓடும்
ஒரு ஆற்றின் அடியாழத்தில்
அருகருகே ஒட்டியுரசி கிடக்கும்
இரு கூழங்கற்களாக
போர்வைக்குள் கிடக்கிறோம்
பேச்சற்று
அசைவற்று
ஒருவரையொருவர் பார்த்தபடி
வெளியே இருளும் குளிரும் நிறைந்து வழிய
சீரான மூச்சு கவிதை சொல்ல
நம்மை தழுவி கிடக்கிறது
காதல்
No comments:
Post a Comment