Wednesday 23 September 2015

கவிதைக்கான ஆஸ்கார்

இந்தா மைசூர் பா

ம்ம், நல்லாருக்கு, எங்க வாங்குனே

வாங்கல , வீட்ல செஞ்சது , நல்லாருக்குல்லே !
எங்க அப்பா இனிப்பெல்லாம் நல்லா செய்வாரு

அதான் தெரியுமே
-
-
" லட்டு,மைசூர்பா,ஜிலேபியெல்லாம் அல்ல
உன் அப்பா உண்டாக்கியதில்
எனக்கு தெரிந்து
ஆகச்சிறந்த இனிப்பு நீதான்"
-
-
எப்புடீ?

ஐயோ , கவிதெ கவிதே!
இந்த வருஷத்தோட ஆஸ்கார் உனக்குத்தான்

அப்படி , கவிதைக்கான ஆஸ்கார் பெற்ற
உலகின் முதல் கவிஞனானேன் நான்.

சுபம்.

No comments:

Post a Comment