eசில ஜென்மங்கள்
ஒரு பாலைவன பாறை போல
தாகித்து தவம் கிடந்தேன்
மேலும் சில ஜென்மங்கள்
பசித்து களைத்த ஒரு அடிபட்ட ஓநாய் போல
தனித்தலைந்தேன்
எது எப்படியோ
உன் காதலால் மீண்டும் ஒரு பிறவி
பசியும் தாகமும் மட்டுமே அறியும்
புதிதாய் பிறந்த குழந்தை போல.
நீ அன்னபூரணி
நீ அமிர்த வர்ஷிணி
நீ நான் வாழும் உலகம்.
No comments:
Post a Comment