Saturday 25 April 2015

ஆகவே அன்பே.........

உன்னை பற்றி யாரும் கேட்டால் கூசாமல் கோடி பொய் சொல்வேன் வார்த்தைகள் வழியாய் கூட என்னுள்ளிருந்து உனை போகாமல் பார்த்துக்கொள்வேன் ஆகவே........ *** என் கைகளால் உன் கன்னம் எடுத்து மூக்கோடு மூக்குரசி கோடி முத்தமிடுவேன் ஆகவே........ *** உன்னை சிறு பொம்மையாக்கி மாரோடு சேர்த்து கொள்வேன் ஆகவே........ *** காலமெல்லாம் நீ பேச அதை நான் ரசித்திருப்பேன் போர்வைக்குள் கேட்கும் மழை சத்தம் போல ஆகவே........ *** கோவித்து திரும்பி படுக்கும் இரவில் காதோரம் பாடல் படிப்பேன் ஆகவே........ *** எப்போதேனும் அழுவாயென்றால் நெஞ்சோடு சேர்த்து உச்சியில் முத்தமிடுவேன் ஆகவே........ *** நீ ரசிக்கும் பாடலுக்கு சாய்ந்து கேட்க தோள் தருவேன் ஆகவே........ *** கள்ளம் செய்து மாட்டினாலும் கண்ணடித்து தப்பிப்பேன் ஆகவே........ *** பிடித்த புத்தகம் வாங்கி தருவேன் ,முதுகில் சாய்ந்து படி ஆகவே........ *** உனக்கு பிடித்த இடத்தில் கண் பார்த்து காதல் சொல்வேன் ,ஆகவே........ உலகில் எனக்கு பிடித்த இடம் உன் கண்களெண்பேன் ஆகவே........ *** பிரியமானவளே, இந்த ஜென்மத்தில் என்னை விட அதிகமாக உன்னை யாரும் நேசிக்க முடியாது, உன்னால் கூட. ஆகவே..........

No comments:

Post a Comment