Saturday 25 April 2015
ஆகவே அன்பே.........
உன்னை பற்றி யாரும் கேட்டால் கூசாமல் கோடி பொய் சொல்வேன் வார்த்தைகள் வழியாய் கூட
என்னுள்ளிருந்து உனை
போகாமல் பார்த்துக்கொள்வேன்
ஆகவே........
***
என் கைகளால் உன் கன்னம் எடுத்து மூக்கோடு மூக்குரசி கோடி முத்தமிடுவேன்
ஆகவே........
***
உன்னை சிறு பொம்மையாக்கி மாரோடு சேர்த்து கொள்வேன்
ஆகவே........
***
காலமெல்லாம் நீ பேச அதை நான் ரசித்திருப்பேன்
போர்வைக்குள் கேட்கும் மழை சத்தம் போல
ஆகவே........
***
கோவித்து திரும்பி படுக்கும் இரவில் காதோரம் பாடல் படிப்பேன்
ஆகவே........
***
எப்போதேனும் அழுவாயென்றால் நெஞ்சோடு சேர்த்து உச்சியில் முத்தமிடுவேன்
ஆகவே........
***
நீ ரசிக்கும் பாடலுக்கு சாய்ந்து கேட்க தோள் தருவேன்
ஆகவே........
***
கள்ளம் செய்து மாட்டினாலும் கண்ணடித்து தப்பிப்பேன்
ஆகவே........
***
பிடித்த புத்தகம் வாங்கி தருவேன் ,முதுகில் சாய்ந்து படி
ஆகவே........
***
உனக்கு பிடித்த இடத்தில் கண் பார்த்து காதல் சொல்வேன் ,ஆகவே........
உலகில் எனக்கு பிடித்த இடம் உன் கண்களெண்பேன்
ஆகவே........
***
பிரியமானவளே, இந்த ஜென்மத்தில் என்னை விட அதிகமாக
உன்னை யாரும் நேசிக்க முடியாது, உன்னால் கூட. ஆகவே..........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment