Saturday 17 August 2013

அர்த்xxஹின்ட்ரக் fஹ்ச்ம்ஹ்fஷ்





இந்த கவிதையின்
முதல் வரிக்கு முன்னால்
நான் இருக்கிறேன்
கடைசி வரியில் நீயிருப்பாய்
உன்னை ஸ்பர்சிக்கும்
முத்தமிடும்
அணைக்கும் பேராவல் பொங்க
வளைந்து வளைந்து போகும்
எழுத்துக்களில் வழுக்கி
வரிகளின் கல் படிகளில் விழுந்து
அடிபட்டு
உருண்டு
ரத்தம் சொட்ட சொட்ட
தட்டு தடுமாறி ,
எழுந்து பார்க்கிறேன்
உன்னை காணவில்லை.
மீண்டும் வழி தவறிவிட்டேன்.

No comments:

Post a Comment