Tuesday 11 June 2013

மழைக்காதல்

"என்ன எப்பிருந்துடா லவ் பண்ண தொடங்குனெ?"

அன்று ,மாலை 4 மணி இருக்கலாம்
குடையை சுற்றிக்கொண்டு
மழையுடன் விளையாடி வந்தாய்,
உன் விளையாட்டில் தெறித்த ,ஒரு துளி
ஒதுங்கி நின்றிருந்த
என் கன்னத்தில்பட்டு  சிலிர்த்தேன்
இமைகளின் சிப்பிக்குள் விழுந்த நீ
முத்தானாய்
கன்னம் வருடிய துளி
முத்தமானது
இதுதான் ,மழையிடம் உன்னிடமும்
நான் ,காதல்கொண்ட கதை!

No comments:

Post a Comment