Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 6

எதற்காக தனிதீவு?
அத்தை நகர்ந்ததும்
அடுப்படி ஓடிவந்து
பின்னாலிருந்து அணைத்து
செல்லக்கடி  கடித்து
வலக்கழுத்தில் முத்தம் பதித்து
வந்த சுவடே தெரியாமல்
கிள்ளி விட்டு ஓடிவிடும்
அந்த "திருட்டு பூனை"யுடன்
இந்த வீட்டில்
இப்படியே வாழ்ந்துவிட்டு போகிறேன்
எதற்காக தனிதீவு!

No comments:

Post a Comment