அதிகாலை மலர்ந்துவிட்ட புதிய பூ போல
உன் பழிவாங்கும் உணர்ச்சி
வார்த்தைகளாய் விரிகிறது, உன் சிரிப்பில் முட்கள்
"யானைக்கும் அடி சருக்கும்"
நீ என்னை தேர்ந்தெடுத்தாய்!
தவறை திருத்திக்கொண்டாய்;
தவறேயில்லை!
வெறுப்பின் பள்ளத்தாக்கிலிருந்து
அகங்காரத்தின் உச்சிக்கு செல்லும் பயணியே,
உன் யாத்திரை இனிதாகட்டும் !
நான் ,
கவிதைகளால்
என் உலகத்தை
அழகுபடுத்திக்கொள்பவன்!
நிர்வாணம் விரும்புவன் ,
முகமூடி இடுவதில்லை!
அந்த மழை எனக்கானதல்ல!
இந்த வெயில் உனக்கானதல்ல!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
No comments:
Post a Comment