Saturday 25 May 2013

அதிகாலை மலர்ந்துவிட்ட புதிய பூ போல
உன் பழிவாங்கும் உணர்ச்சி
வார்த்தைகளாய் விரிகிறது, உன் சிரிப்பில் முட்கள்

"யானைக்கும் அடி சருக்கும்"
நீ என்னை தேர்ந்தெடுத்தாய்!


தவறை திருத்திக்கொண்டாய்;
தவறேயில்லை!


வெறுப்பின் பள்ளத்தாக்கிலிருந்து
அகங்காரத்தின் உச்சிக்கு செல்லும் பயணியே,
உன் யாத்திரை இனிதாகட்டும் !


நான் ,
கவிதைகளால்

என் உலகத்தை
அழகுபடுத்திக்கொள்பவன்!


நிர்வாணம் விரும்புவன் ,
முகமூடி இடுவதில்லை!


அந்த மழை எனக்கானதல்ல!
இந்த வெயில் உனக்கானதல்ல!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

No comments:

Post a Comment