Saturday 25 May 2013

இருள் கவியும் காலம்

கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
தாத்தா.

வெடித்துக்கிடக்கும் வயல் வெளியில்
சோகமாய் பாடிச்செல்கிறது
ராப்பாடி 

கொட்டடியில்
'எதையோ' அசைப்போட்டுக்கொண்டிருந்தது
மெலிந்த காளைகள்.

தூரத்தில்  மறைகிறான் சூரியன்!

No comments:

Post a Comment