பித்த நிலை முற்றிய தருணமொன்றில்,
பசியோடு கைநீட்டும் முதியவர் முகத்தில்
வெந்நீரை ஊற்றி துரத்தும் அளவுக்கு
கொடியவரில்லை
நம்மில் யாரும்,
எப்போது வேண்டுமானாலும்
யார் மீது வேண்டுமானாலும்
வீசப்படலாம்
உள்ளே கொதித்துக்கொண்டிருக்கும்
சில வார்த்தைகள்
No comments:
Post a Comment