நேற்று முழுதும் குடித்திருந்தேன்
ஒன்றும் ஞாபகமில்லை!
இன்றைய பகல் பொழுதுகள்
ஒரு உஷ்ணக்காற்றைப்போல்
சுழன்று சுழன்று
திக்குகளற்று திரிந்தேன்.
இரவும் நிலவும் பசியோடிருப்பதையறிந்து
நானிங்கு வந்தேன்.
என் இதயத்தின் இறைச்சித்துண்டு கிட்டாமல்
நீயும் பசித்திருப்பாயே,
அதை, என்னால் தாங்க முடியுமா!
No comments:
Post a Comment