மின்விசிறி காற்றில்
பறந்துயர எத்தனித்தபடி
படுக்கை விளிம்பில்
அவள் சேலை சிறகுகள்.
கண்கள் கூசிடாத அவள் ஒளிவட்டத்தை
இரவு விளக்கு தாங்கி பிடிக்க
வரமொன்று தந்துவிட்டு
அசதியாய் உறங்குகிறாள்
என் தேவதை .
என் மார்மீது படர்ந்து கிடக்கும்
இந்த கைகளில்மீது
என் கை வைத்தால்
வலிக்குமோ என்னமோ!
No comments:
Post a Comment