Thursday 14 March 2013

ஆலமர திண்டிலமர்ந்து
"உனக்கு ஞாபகமிருக்கா?"
"உனக்கு ஞாபகமிருக்கா?" என்றபடி
பழங்கதை அசைப்போட்டு சிரிக்கும்
இரண்டு தாத்தாக்களின் மனமும்
நடுங்கியிருக்கலாம்
காற்றிலாடும்
பழுத்த ஆலிலை போல,
பின்  பெருமூச்சு, 
மறுபடி அமைதி
ஆலமரமும் பெருமூச்சு விட்டு அமைதியானது போல!

No comments:

Post a Comment