ஆலமர திண்டிலமர்ந்து
"உனக்கு ஞாபகமிருக்கா?"
"உனக்கு ஞாபகமிருக்கா?" என்றபடி
பழங்கதை அசைப்போட்டு சிரிக்கும்
இரண்டு தாத்தாக்களின் மனமும்
நடுங்கியிருக்கலாம்
காற்றிலாடும்
பழுத்த ஆலிலை போல,
பின் பெருமூச்சு,
மறுபடி அமைதி
ஆலமரமும் பெருமூச்சு விட்டு அமைதியானது போல!
No comments:
Post a Comment