Thursday 14 March 2013

*ஆற்றங்கரை வீட்டுக்கூடம்*

வடகிழக்கு மூலையில் அமர்ந்து,
வரவு செலவு கணக்கு பார்க்கிரார்
கிருஷ்ணன் குட்டி தாத்தா, 

தன் இரண்டு வயது மகனை
ஆங்கில பள்ளியில் சேர்ப்பது பற்றி,
அப்பாவோடு விவாதித்து கொண்டிருக்கிரார்
சுதாகரண்ணா.

"அறிவுள்ள புள்ளை எங்க படிச்சாலும் ,
படிக்கலேன்னாலும் ,
முன்னேறிக்கும் சுதாகரா,
கவனம் வேணும் கவனம்!
கடகெட்ட நாயி,
இவனெயெல்லாம் வளத்தி,ஆளாக்கி……………
எப்போதும் போலவே கடைசியில்
என் மீதுதான் வந்து விழும்
அப்பாவின் கோபம் !

"ட்டொக்கு,ட்டொக்கு வென்று
வெற்றிலை இடித்துக்கொண்டே,
"இந்த காலத்து புள்ளைகளுக்கு எங்க
இடுப்பு வளையுது???
சுச்சு போட்டா
தேங்கா அரைக்குது,
கொளம்பு வைக்குது,
அத்தன குப்ப கெடக்கு  ,அடிச்சு விடறாளா பாரு"
பழமுத்தி என்று செல்லமாய் அழைக்கப்படும்
குறும்பை பாட்டியிடம் ,
குறைகள் அடுக்குவாள்
வேலம்மை பாட்டி, 

ஏதேனும் ,பெண்கள் கதை பேசிக்கொண்டிருக்கலாம்
கதிர்வேலும் , டெய்லர் மணியும் ! 

தென்மேற்க்கில் ,
லாலிபப் சப்பிக்கொண்டே
குட்டி சைக்கிளில் வட்டமடிக்கிறாளொ, அம்மாவை நினைத்து அழுகிறாளோ,
தவிட்டு தாளிக்குள்
தவறி விழுந்து இறந்து போன
ரேவதிக்குட்டி.


No comments:

Post a Comment