Wednesday 9 January 2013

*மாலகோவில்*


நெல்லுக்குத்தும் அம்மிக்குள்ள
என் நெஞ்ச வச்சு குத்துரா,
கல்ல கொத்தும் உளியப்போல
கண்ணு ரெண்டையும் கொத்துரா,
கரும்ப சக்கையாக்கி
உசிரயெல்லாம் புழியுரா,
பிஞ்சு போன செருப்புகால,
நைஞ்சு போயி நடக்குது மனசு,
களத்து மேட்டு பக்கம்
கதிரறுக்க போகயில,
நீ இல்லாத என்ன
மாடு கூட மதிப்பதில்லெ,
தக்காளி வெல கொரஞ்சிடிச்சி,
மாட்டோட மடி வத்தீரிச்சி ,
ஏன்டி அன்னக்கிளி,
எப்பொ முழுசா கொல்லப்போறே???
நீ மில்லுக்கு போற வழியெல்லாம் ,
சூரி முள்ளு, பாத்துப்போ!


No comments:

Post a Comment