Sunday 6 January 2013

தனிமை நிறம்

இரு இயந்திரங்களின் செயல்பாடென ,
ஒரு நீலப்படம் ஓடுகிறது,
சலுப்புற்று கிடக்கும் உடலை
வெயில் மேயும்  .
காய்ந்த செடிகளிடையே பூவைத்தேடி
எங்கும் அமராது
படபடத்து பறக்கும்
பட்டாம்பூச்சி 
கண்கள் மூடினால் ,
என்னிடம் இருட்டுமில்லை
கருப்புமில்லை,
ஒரே சாம்பல் நிறம் .
உன்னை கடப்பதை போலவே
எளிதாய் இல்லை
இந்த நாட்களை கடப்பதும்!
உன்னோடு சேர்ந்திருக்கயில்
அனாதயாய் திரியவிட்ட
"என் தனிமைக்கும் "
இப்படிதான் வலித்திருக்கும் ,
பாவம்!


No comments:

Post a Comment