வாசலில்
நீர் தெளித்த
தடம் போல,
நீ கோபத்தில் தெளித்த
வார்த்தைகள் சிதறிக்கிடக்கும்!
உன் தோழிகளுக்கான
பகட்டுக்களில்,
நாம் இழந்த கணங்கள்,
உனக்கு தேவையான பொருட்களை விட
விலை அதிகம்!
என் கோபம் உணரவில்லை,
உன் கன்னத்தில்
கை பதித்த வன்மம்.,
நீயும் உணர்ந்தபாடில்லை,
என் வியர்வையின்
போராட்டங்களை!
நீ விட்டுச்சென்ற தனிமை
வீடு நிறைக்கும்,
உன் கொலுசொலியும்
சிரிப்பையும் போல,
ஒரு மென் சோகம்
இதயம் குடையும்
ஒரு மண்ணுளி பாம்பை போல!
எப்போது வருவாய்?
உன் வீட்டை விட்டு,
நம் வீடுக்கு?
உனக்காக வாங்கிய உனக்கு பிடித்த
பட்டு புடவைக்கு
என்ன பதில் சொல்ல?
Saturday, 3 November 2012
*சர்வ லட்ச்சணங்களும் பொருந்திய சாமுத்ரிகா பட்டு*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment