உன்னைபற்றி
காற்று சொன்னது,
"முள்ளிலாத பூச்செடி"
அவளை
கடந்த பின் தான்
"நான் , பூங்காற்று"!
வலிந்து
திணிப்பாயாமே,???
அன்பின் வாசனையை!
குழந்தைக்கு
கூள் ஊட்டும்
தாய் போல!
"நாங்கள் இருவரும்
தோழிகள்,
இருவருக்கும்
ஒரே குணம்,
" மழை சொன்னது!
முழுவதும் நனைத்து விடும்
கவிதை சாரலாம்
நீ!
நிலவுக்கு
போட்டியா நீ???
அமாவாசை
நாட்களில்,
அரவணைத்து,
அறிவுரை கூறும்
"குட்டி மின்மினி"!
ஊதாரி பெண்ணாம் நீ,
ஊரே சொல்லுது!
"எடுத்து வச்சி
என்னாக போகுது"வென்று,
ஊரெல்லாம்
அள்ளி தெளிக்கிராயாம்,
உன் விலைமதிப்பற்ற
புன்னகையை!
உன்னோடு பழகிய
எல்லாரும் சொன்னார்கள்
உன்னை பற்றி!
எனக்கோ
புது பழக்கம்!
பெரிதாய்
ஒன்றும் தெரியாது!
உன்
கைகளை பற்றி, மட்டும்
சொல்லி விடுகிறேன்
நான்
ஊஞ்சலாட
தேர்ந்தெடுத்த
ஆலம் விழுது!!!!
No comments:
Post a Comment