Thursday, 27 June 2013

இரண்டாம் திருமணம்

திருமண புகைப்படங்களை
முழுதாய் பார்த்தபின்
தன்னை காணவில்லையென
அழத்தொடங்குகிறாள்
ஆனந்தவர்ஷினி குட்டி 
மாலைமாற்றி,
விரல் கோர்த்து
கட்டில் சுற்றிவந்து
கன்னத்தில் ஆசி வாங்கி
மீண்டுமொருமுறை நடந்தேறியது
மகள் தலைமையில்
எங்கள் திருமணம்!
"தம்பி பாப்பா வேணுமா?
தங்கச்சி பாப்பா வேணுமா?"
கேட்டுக்கொண்டிருக்கயில்
வெட்கத்தில் சிணுங்குகிறாள்
புதுப்பெண்.

இனி ,நீ
காறி உமிழ்ந்தாலும்
கவலையில்லை.
என்னை ,
சந்தோஷமாக ஓடும்
ஒரு சாக்கடையாக
எண்ணிக்கொள்வேன்!
ஹ ஹ ஹ

கம்பளிப்பூச்சி

அந்த கம்பளிபூச்சி
மெதுவாய்
ஊர்ந்து நகர்கிறது
உள்ளுக்குள்.




எல்லோரிடமும்
"ஏதோ" ஒரு கம்பளிபூச்சி!

மீதம்

ஒரு புன்னகை
சம்பிரதாயமான  நலம் விசாரிப்புகள்
பின் ,அவரவர் தனிமைக்குள் விழுந்துவிட்டோம்

கிணற்றில் கல் எறிந்த சப்தம் போல
ஏதேதோ பேச்சு
அன்றைய ,ஏதும் நினைவிலில்லை!
சேமிப்பாய் இப்போதைக்கு
அந்த  புன்னகை முகம்!

கணக்கு

இருளில் வாழ்பவருக்கும்
வெளிச்சத்தில் இருப்பவருக்கும்

ஒரே நாள்தான் !

இருளும் ,வெளிச்சமும் பாதி பாதி
ஆதியும் ,அந்தமும்
யாருக்கும் தெரியாது!

நான்

அழுதேன்; உண்மையில்லை
சிரித்தேன் ;உயிர்ப்பில்லை
திரும்பி நடந்தால்
துணையில்லை !

நீயோ,
எப்போதும்(போல)  புன்னகைக்கிறாய்!

பிரிவின் ஆறுதல்

மறைத்து வைத்த காதல்
செத்து மிதந்து நாறும்
பாழும்கிணறு ,என் இதயம் .
உன் பங்குக்கு
ஏதேனும் குப்பையை
வீசிவிட்டு போ 
அதோடு கொஞ்சநாள் வாழ்கிறேன்.