Wednesday, 4 September 2013

என் "கண்ணுப்படுவதற்காகவே "
அழகாய் ,பிறந்தவள் நீ.
உன் கண்ணில் படுவதற்காகவே
தவமாய் கிடப்பவன் ,நான்.

இதயம்

காதலெனும் பூச்செடியுமில்லை
பிரிவுயெனும் முட்செடியுமில்லை
துக்கமெனும் புதர்களுமில்லை
வேரோடு பிடுங்கி எறிந்தாகி விட்டது

விளைநிலம் வீணாய்போகட்டும்
கவலையில்லை!

பிம்பங்கள்

நீங்கள் குடிக்கிறீர்கள் , நானும் .
நீங்கள் புகைக்கிறீர் ,நானும் .
உங்களுக்கும் காமம் ,
பசி......
துக்கம் .......
சிரிப்பு .......எனக்கும் அதே .
உங்களிடம் ,சினேகமாய் புன்னகைக  முடியும் .
அந்நியமான பார்வையை
உங்களாலும் அகற்ற முடியும் . இருந்தும்,
குளியலறைக்குள்
தனிமையில் புலம்பி 
கொக்கரித்து
சுவரிடம் பேசி
கதையொன்றில் அழுது
பைத்தியம் மறைத்து வெளியே வரும்
என்னை போல்தான் நீங்களென
விலகி நகர்கிறேன் .
நீங்களும்…………………

சந்தை

வார்த்தைகள் விழுந்து சிதறியதும்
ஒரு பேரிரைச்சல்
பின் ,கனத்த அமைதி.

கவிதையும் அந்த கவிஞனும்

வெற்றிகரமாய் சுட்டிக்காடுவது
கவிதை
பற்றிக்கொள்ள தவறிவிட்டவன்
கவிஞன்.

ஏளனம்

வெறிகொண்டு வெட்டியெரி,
அழித்துவிட்டதாய் ஆர்ப்பாட்டம் செய் 
அடுத்த மழைக்கு
மீண்டும் முளைப்பேன்
சிறு புல் தான் நான்.

ஒரு வரி





"இறைவன் மெளனமாய் புன்னகைக்கிறான்".